விடுமுறை நாட்களில் செயல்படாத ஏடிஎம்கள்
காஞ்சிபுரத்தில் விடுமுறை தினங்களில் ஏடிஎம்கள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
கோயில் மற்றும் பட்டு நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் காஞ்சியில் தங்கியுள்ள நிலையில் நகரை சுற்றி பிரதான வங்கிகளின் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வாரஇறுதி, விடுமுறை நாட்களில் வங்கி ஏடிஎம்கள் சரிவர இயங்குவதில்லை .போதிய பணம் இருப்பு வைப்பதில்லை.
இந்திராகாந்தி சாலையில் இயங்கும் 7கும் மேற்பட்ட இயந்திரங்கள் பணம் பெறுதல் மற்றும் செலுத்துவதற்காக வைக்கப்பட்ட நிலையில் ஒரு இயந்திரம் மட்டுமே இயங்குகிறது.பணம் எடுக்க சென்றால் காத்து கிடக்கும் நிலையில் அதிகாலை விடுமுறை தின செலவிற்கு கூட பண எடுக்க அலைய வேண்டிய நிலை உள்ளது. சுற்றுலா வரும் வெளிநபர்கள் இதனால் பாதிப்பு அடைகின்றனர். விரைவாக வங்கிகள் இந்த குறைபாடை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.