Begin typing your search above and press return to search.
ஆவணங்களின்றி எடுத்து சென்ற 4 லட்சம் பறிமுதல்
கள்ளக்குறிச்சியில் பறக்கும்படை வாகனசோதனையில் ரூ. 4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூர் சுங்கச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் இன்று காலை ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனர். இதில் எவ்வித ஆவணங்களும் இன்றி எடுத்து வரப்பட்ட 4 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் காரில் வந்தவர் மீன்குஞ்சு வியாபாரி எனவும் இவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கிராம ஏரியில் ஏலம் எடுக்க சென்று மீண்டும் வீடு திரும்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது