/* */

இன்றைய (ஜூன்.07) ஈரோடு மாவட்ட முக்கிய செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் இன்று நடந்த முக்கிய செய்திகள் இதே.! உங்கள் பார்வைக்கு..

HIGHLIGHTS

இன்றைய (ஜூன்.07) ஈரோடு மாவட்ட முக்கிய செய்திகள்
X

கோப்பு படம்

அந்தியூர் செய்திகள்:-

* அந்தியூர் அடுத்த பர்கூரில் 2,000 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்த மூன்று பேரையும் பர்கூர் போலீசார் கைது செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை ஈரோடு மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

* அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் நீரோடை ஆக்கிரமிப்பை அந்தியூர் மண்டல வட்டாட்சியர் ரவி , அத்தாணி வருவாய் ஆய்வாளர் நந்தக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

* அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ராஜேந்திரனை அந்தியூர் போலீசார் கைது செய்து, 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

* அந்தியூர் புதுப்பாளையத்தில் இன்று மாலை நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் 2,050 வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் ரூ.4.71 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் செய்திகள்:-

* டி.என்.பாளையத்தில் இருந்து பவானிக்கு ரேஷன் அரிசியை கடத்தி முயன்ற வாலிபரை பங்களாப்புதூர் போலீசார் கைது செய்து, 2 டன் ரேஷன் அரிசியை ஈரோடு மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பவானி செய்திகள்:-

* அம்மாபேட்டை அருகே தலைமை காவலரை மது போதையில் தாக்கிய லாரி டிரைவர் நாகராஜை அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரிச்சேரிப்புதூர் பகுதியை சேர்ந்த 16-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி சிபிஐ கட்சி சார்பில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

* ஆப்பக்கூடல் மது பானக்கடை அருகே பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கூத்தம்பூண்டியை சேர்ந்த மாரிமுத்து மீது ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* அத்தாணி அருகே உள்ள குப்பாண்டம்பாளைத்தை சேர்ந்த மாடு வியாபாரி கருப்புசாமி. புஞ்சைபுளியம்பட்டி மாட்டு சந்தைக்கு சென்றவர் வீடு திரும்பாததால் அவரை கண்டு பிடித்து தரக்கோரி மனைவி ஆப்பக்கூடல் போலீசில் புகார் செய்துள்ளார்.

ஈரோடு மாநகர் செய்திகள்:-

* ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் விசாரணையை முடித்த மருத்துவ குழுவினர் நேற்று ஈரோடு எஸ்.பி.,யுடன் ஆலோசனை நடத்தினர். இவ்விவாகரத்தில் கைது செய்யப்பட்டுள்ள, 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

* ஈரோட்டில் 2வது நாளாக நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக நம்பியூரில் 61.0 மி.மீ , பெருந்துறையில் 37.0 மி.மீ , சென்னிமலையில் 35.0 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

* ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 213 மனுக்கள் பெறப்பட்டன. கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தார் குமரன் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டன.

* ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஜூன் 14ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் ராகுராமன் தெரிவித்துள்ளார்.

* ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில் துரித உணவு தயாரித்தல் பயிற்சி வரும் ஜூன் 20ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடக்கவுள்ளது.

Updated On: 7 Jun 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  2. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  4. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  5. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  6. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  8. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  9. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்