காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
![காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா](https://www.nativenews.in/h-upload/2024/06/14/1915298-img-20240614-wa0098.webp)
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி துவக்க விழா நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி ஆகியோர் பொதுமக்களின் மனுவிற்கு உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கியபோது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் பசலி 1433 என கூறப்படும் ஜமாபந்தி நிகழ்வு காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போது வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி மற்றும் எம்எல்ஏ எழிலரசன் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்று ஐந்து மனுக்களுக்கு உடனடி தீர்வு கண்டு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் வருவாய்துறை சார்பில் வருவாய் துறை சார்ந்த தீர்வுகளுக்கான மனுக்கள் அளிக்கும் விதமாக வருவாய் தீர்வாயம் பசலி 14 33 என கூறப்படும் ஜமாபந்தி நிகழ்வு தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்களில் துவங்கி நடைபெறுகிறது.
அவ்வகையில் வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் , சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை துவக்கி வைத்தனர். இதே போல் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று திருப்பும் குழி குறுவட்டம் சார்ந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்ற அதனை உரிய தீர்வு காணும் வகையில் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதில் 5 மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டு உரிய நபருக்கு பட்டா வழங்கப்பட்டது.
காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1:30 வரை இந்நிகழ்வு விடுமுறை நாட்களைத் தவிர 21ம் தேதி வரை நாள்தோறும் நடைபெறும்.
இந்நிகழ்வில் வட்டாட்சியர் புவனேஸ்வர், மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu