/* */

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் ஓலை குடிசையில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்
X

Erode news, Erode news today- நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குப்புசாமி.

நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த நபர் கைது

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் சின்ன சாலட்டி பகுதியில் சட்டவிரோதமாக ஓலைக்குடிசையில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த கொட்டினக்காட்டு பகுதியை சேர்ந்த குப்புசாமி (53) என்பவரை கடம்பூர் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் குப்புசாமி மீது வழக்குப்பதிந்து கைது செய்து, கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

தீராத பல்வலி; விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

ஈரோடு, ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (47). சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், தீராத பல்வலியால் அவதிப்பட்டு வந்தவர், கடந்த 1-ம் தேதி விஷம் தின்றார். இதனையடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கடந்த 4-ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலூக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முட்புதரில் சட்டவிரோதமாக மது விற்பனை

பெருந்துறை அருகே உள்ள வெள்ளோடு குமரன் நகர் ஹவுசிங் யூனிட் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முட்புதரில் சட்டவிரோதமாக மது விற்ற, மதுரை மாவட்டம் மேலூர் அய்வத்தன்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்கிற அருண்பாண்டி (20) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது‌

அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை மூலக்கடை பஸ் ஸ்டாப்பில், அம்மாபேட்டை போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த சேட்டு என்கிற ராமசாமி (63) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டீ கடையில் குட்கா, புகையிலை பொருட்களை விற்றவர் கைது‌

அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள சனிச்சந்தை பகுதியில் உள்ள டீ கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த அந்தியூர் ஜராத்தல் கிழக்கு காந்திநகரை சேர்ந்த மொரப்புரான் (62) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 500 ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது‌

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர், ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன் (43). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 868 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து செங்கோட்டையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சித்தோடு அருகே உள்ள நசியனூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மூத்த மகள் ஸ்ரீநிதி (16). 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல் நிலை சரியில்லாததால், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

விஷம் குடித்து முதியவர் பலி

சித்தோடு அருகே உள்ள கோணவாய்க்கால், அப்பாச்சி ஐயர் தோட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (72). இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்த சுப்பிரமணியம் கடந்த 12-ம் தேதி மாலை விஷம் சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் தாமோதரன் அளித்த புகாரில் பேரில் சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு

கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் கிராமம் கொம்பைப்புதூர் குரங்கன்ஓடை பகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை, கொடுமுடி போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக ஊஞ்சலூர் கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 Dec 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?