/* */

குழந்தைகளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கையை கற்றுத்தர வேண்டும்: நடிகை சுஹாசினி

குழந்தைகளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கையை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடிகை சுஹாசினி கூறினார்.

HIGHLIGHTS

குழந்தைகளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கையை கற்றுத்தர வேண்டும்:  நடிகை சுஹாசினி
X

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு புத்தக திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. அங்கு நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்ச்சிக்கு சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கினார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் "நிமிர்ந்த நன்னடை" என்ற தலைப்பில் பேசிய நடிகை சுஹாசினி கூறுகையில், பெண்கள் 65 சதவீதம் பேர் உழைக்கின்றனர். ஆண்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே உழைக்கிறார்கள். ஆனால் வருமானத்தில் 91 சதவீதத்தை ஆண்கள் ஈட்டுகின்றனர். 9 சதவீதத்தை மட்டுமே பெண்கள் ஈட்டுகிறார்கள்.

இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்களில் 45 சதவீதம் பேர்ஒரு வருடத்திலேயே அந்த வேலையை விட்டுவிடுகின்றனர். இதற்கு வீட்டிலும், வெளியிலும், பணியாற்றும் இடத்திலும் ஏராளமான காரணங்கள் உள்ளன.

நாட்டை வல்லரசாக்கும் திறன் பெண்களுக்கு உள்ளது என்பதை ஆண்கள் உணர்ந்து, பெண்களை வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். பெண்கள் தவறுகளை சுட்டிக்காட்டும் தைரியம் படைத்தவர்களாக இருக்க வேண்டும். இந்த தைரியத்தை குழந்தை பருவத்திலேயே ஏற்படுத்த பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.

திரைத்துறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் திரைத்துறையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் 100 சதவீதம் உழைப்பை செலுத்தியவர்கள் என்பதை மறுக்க முடியாது. தற்போதைய இளைஞர்களுக்கு தோல்வியை சந்திக்கும் பக்குவம் இல்லை. அதனால் தான் முயற்சி செய்ய தயங்குகின்றனர். குழந்தைகளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கையை கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளின் நல்ல செயல்களை, முயற்சிகளை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்

Updated On: 11 Aug 2022 6:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்