தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், தற்போது பொதுத் தேர்வுகள் இன்று ( 5 ஆம் தேதி) பிளஸ் 2 தேர்வு தொடங்கியது வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. 179 பள்ளிகளைச் சேர்ந்த 20,347 மாணவ மாணவிகள் 79 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
மொத்தம் மாணவர்கள் 10,151 பேரும், மாணவிகள் 10,196 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இதில் 102 அரசு பள்ளிகளை சேர்ந்த 13,920 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் 6515, மாணவிகள் 7405 தேர்வு எழுதுகின்றனர்.
தலைமை கண்காணிப்பாளர் 79 பேர் கூடுதல் தலைமை கண்காணிப்பாளர் 4 பேர் தேர்வு அலுவலக அதிகாரிகள் 79 பேர் பறக்கும் படையைச் சேர்ந்தவர்கள் 128 பேர் தேர்வறை கண்காணிப்பாளர்கள் 1280 உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் ஓராண்டு தடை விதிக்கப்படும். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என தேர்வுகள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்றனர்.