/* */

பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்மபுரி மருத்துவமனைக்கு வருகை

ராஜூவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, பரோலில் உள்ள பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக தர்மபுரிக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்மபுரி மருத்துவமனைக்கு வருகை
X

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட பேரறிவாளன்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கைதியாக உள்ள பேரறிவாளன் பரோலில் வந்து தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் இருந்து வருகிறார். தொடர்ந்து பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் பேரறிவாளன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பேரறிவாளனுக்குத் தமிழக அரசு பரோலை நீட்டித்து வருகிறது. மேலும் பரோலில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் தொடர்ந்து கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு ஸ்கேன் எடுப்பதற்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்திருந்தார். ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் டி.எஸ்.பி., வெங்கடகிருஷ்ணன் தலைமையில் ஒரு உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 10 காவல் துறையினர் பாதுகாப்புடன் தர்மபுரியில் உள்ள தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் ஸ்கேன் சென்டருக்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது பேரறிவாளனுடன் அவரது தாயார் அற்புதம்மாள் வந்திருந்தார். தொடர்ந்து பலத்த காவலர்கள் பாதுகாப்புடன் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யபட்டது. தொடர்ந்து சிறுநீரகம் தொடர்பாக அருகில் உள்ள மற்றொரு தனியார் மருத்தவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து 2 மணியளவில் பரிசோதனைகள் முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, இதே மருத்துவமனைக்கு பேரறிவாளன் வந்து உடல் பரிசோதனை செய்து கொண்டார். தொடர்ந்து பேரறிவாளன் சிகிச்சைக்காக வந்ததால், தருமபுரி நகர் பகுதியில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 8 Feb 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்