விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும்: திமுக கூட்டத்தில் தீர்மானம்
தர்மபுரி நகராட்சி பகுதியில் விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க கட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
HIGHLIGHTS
தர்மபுரி நகர திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர பொறுப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ரஹீம், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரப் பொறுப்புக் குழு உறுப்பினர் முல்லைவேந்தன் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. பொருளாளர் தடங்கம் சுப்பிரமணி கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். வருகிற உள்ளாட்சி மன்றத் தேர்தலையொட்டி வாக்களர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க கட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற கட்சி நிர்வாகிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். நகராட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற தமிழக அரசின்சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள், மகளிர் அணி அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொதுக்குழு உறுப்பினர் காசிநாதன் நன்றி கூறினார்.