/* */

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், ஆய்வறிக்கை தயார் செய்யும் பணி தீவிரம்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் குறித்து ஆய்வறிக்கை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், ஆய்வறிக்கை  தயார் செய்யும் பணி தீவிரம்
X

செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்களை குறைக்க தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் என்னென்ன செய்வது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு ,மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்காள் செல்வதன் காரணமாக தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் எந்நெந்த பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது, மக்கள் அதிக அளவில் சாலையை கடக்கும் பகுதிகள், சிக்னல் எங்கெங்கு பொருத்தவேண்டும் என்றவற்றை ஆய்வறிக்கையாக சமர்பிக்க மாவட்ட ஆட்சியரகம் சார்பில் வட்டார போக்குவரத்துத்துறை, காவல்துறை, மற்றும் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று, வட்டார போக்குவரத்துத்துறை, காவல்துறை, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியிலிருந்து வண்டலூர் இரணியம்மன் கோயில் பகுதி வரை ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மக்கள் அதிக அளவில் சாலையை கடக்கக்கூடிய மஹேந்திராசிட்டி தொழிற்பூங்கா சாலை, சிங்கப்பெருமாள்கோயில், மறைமலை நகர் தொழிற்பேட்டை, கூடுவாஞ்சேரி, வண்டலூர் ஆகிய பகுதிகளில் சிக்னல் அமைப்பது, சாலை தடுப்புகள் அமைப்பது உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 9 July 2021 11:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது