/* */

மறைமலைநகரில் நாளை 18 இடங்களில் கொரொனா தடுப்பூசி சிறப்பு முகாம்

மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட 18 இடங்களில் நாளை மெகா கொரொனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு.

HIGHLIGHTS

மறைமலைநகரில் நாளை 18 இடங்களில் கொரொனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட 18 இடங்காளில் நாளை கொரொனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்ற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்லாயிரக்கணக்காணோர் தினந்தோறும் வந்து செல்கின்றனர். கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் பல பகுதிகளில் கொரொனா தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை காரானமாக நாளை கொரொனா சிறப்பு மெகா முகாம்கள் நடைபெறும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாம்கள் நடைபெறும் இடங்கள்:

மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட, சிவ விஷ்ணு கோயில், கூடலூர் ஐ.சி.டி.எஸ், என்.எச் 3 சமுதாயக்கூடம், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையம், பேரமனூர் ஆரம்ப சுகாதார நிலையம், கீழ்கரணை பிள்ளையார் கோயில், சட்டமங்களம் ஐ.சி.டி.எஸ், திருக்கச்சூர் ஐ.சி.டி.எஸ், காட்டாங்குளத்தூர் அரசுப்பள்ளி, மற்றும் மேல்நிலைப்பள்ளி, சதாசிவம் சாலை, கலைமகள் பள்ளி செங்குன்றம், பொத்தேரி ஐ.சி.டி.எஸ், கோணாதி ஐ.சி.டி.எஸ், வல்லாஞ்சேரி ஐ.சி.டி.எஸ், நின்னக்கரை ஐ.சி.டி.எஸ், தைலாவரம், ஐ.சி.டி.எஸ், ரயில்நகர் முருகன் கோயில் ஆகிய 18 இடங்களில் மெகா கொரொனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் அனைத்து மக்களும் கொரொனா தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசியை ஆர்வத்துடன் வந்து செலுத்திக்கொள்ளவேண்டும், என நகராட்சி நிர்வாகம், சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?