Begin typing your search above and press return to search.
இன்று காலை முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுத்தலங்கள் திறப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு
HIGHLIGHTS
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்றுமுதல் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சாமிதரிசனம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை மதுராந்தகம் புகழ்பெற்ற ஏரி காத்த கோதண்ட ராமர் கோயில். அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில். நடுபழனி மரகதபால தண்டாயுதபாணி திருக்கோயில். ஆகிய கோயில்களில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6 மணிமுதல் கோயில்கள்திறக்கப்பட்டது.
பக்தர்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.