/* */

செங்கல்பட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு: 13 பேர் பலி - மருத்துவா்கள் திடீா் போராட்டம்

செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 நோயாளிகள் உயிரிழந்ததை அடுத்து,மருத்துவமனை மருத்துவா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்தனா்.இதையடுத்து மருத்துவமனை மருத்துவர்கள்,மருத்துவ உதவியாளா்கள் இன்று காலை மருத்துவமனை வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மருத்துவமனைக்கு தேவையான ஆகசிஜனை தட்டுப்பாடு இன்றி உடனே வழங்க வேண்டும்.மருத்துவ உதவியாளா்கள் பணி காலியாக இருப்பதை இந்த அவசர காலத்தில் தாமதம் செய்யாமல் உடனே நிரப்ப வேண்டும்.

செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலிருந்து மருத்துவா்களை மற்ற மருத்துவமனைக்கு மாற்றுவதை உடனடியாக தவிா்க்க வேண்டும். அவ்வாறு இடம்மாற்றம் செய்யப்பட்ட மருத்துவா்களை மீண்டும் இங்கு பணியமா்த்த வேண்டும்.இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவா்கள்,மருத்துவ உதவியாளா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் கோஷமிட்டனா்.

இந்நிலையில் மருத்துவ உயா் அதிகாரிகள் போராட்டம் நடத்தியவா்களுடன் பேசினா். ஆக்சிஜன் பற்றாக்குறை,மருத்துவ உதவியாளர்கள்,மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை சரிசெய்வதாகவும்,

தினந்தோறும் ஆக்சிஜன் பற்றாக்குறை இன்றி வழங்கபடும் என்று மருத்துவமனை நிர்வாகம் உறுதியளித்தனா்.அதை ஏற்றுக்கொண்டு மருத்துவா்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனா்.


Updated On: 5 May 2021 12:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது