/* */

சிமெண்ட் ஆலையில் வேலை கேட்டு செந்துறை அருகே கிராம மக்கள் மறியல்

படித்த இளைஞர்களுக்கு, தனியார் சிமெண்ட் ஆலையில் வேலை வழங்கக்கோரி, செந்துறை அருகே கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சிமெண்ட் ஆலையில் வேலை கேட்டு செந்துறை அருகே கிராம மக்கள் மறியல்
X

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் தனியார் சிமென்ட் ஆலை நிர்வாக அலுவலர்கள்.


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள ஆதனக்குறிச்சி ஊராட்சி புதுப்பாளையம் கிராமம். இங்குள்ள மக்கள், அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலையில், படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அரசு விதிமுறைகளை மீறி அதிகளவு ஆழத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கக்கூடாது. காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடி நிலமற்ற மக்களுக்கு வழங்க வேண்டும்.

மாதம் ஒரு முறை மாசு கட்டுப்பாட்டு சோதனை செய்ய வேண்டும். அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் சிமென்ட் ஆலை எடைபாலம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஆலை நிர்வாக அலுவலர்களிடம் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தனர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.

Updated On: 18 Jan 2022 12:49 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...