நல்லெண்ணெய், பாமாயில் விலை ரூ.10 உயர்வு; மேலும் அதிகரிக்க வாய்ப்பு .
விருதுநகர் மார்க்கெட்டில் வரத்து காரணமாக நல்லெண்ணெய், பாமாயில் விலை ரூ.10 உயர்ந்து காணப்பட்டது.
HIGHLIGHTS
விருதுநகர் பருப்புகள், எண்ணெய்கள் மொத்த சந்தையாக உள்ளன. தமிழகத்தின் மொத்த தேவையில் 80 சதவீதம் பருப்புகள், எண்ணெய்கள் இங்கிருந்து தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. ஆகையால்தான் எண்ணெய்யும், பருப்புகளும் விலை விருதுநகரில் நிர்ணயிக்கப்படுகின்றன.
இந்நிலையில், விருதுநகர் மார்க்கெட்டில் பருப்புகள், எண்ணெய்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது. பாமாயில் விலை தொடர்ந்து உயர்ந்தும், பருப்புகள் விலை ஏற்றம், இறக்கம் நிலையில் காணப்படுகிறது.
கடந்த வாரம் விற்ற விலையிலேயே பருப்புகள் விலை நீடிக்கிறது. உளுந்தும்பருப்பு கிலோ 118க்கும், துவரம்பருப்பு ரூ 110க்கும் விற்கப்படுகிறது. பாசிப்பருப்பு ரூ110க்கு விற்கப்படுகிறது. கடலை பருப்பு ரூ 80க்கு என அதே விலையில் காணப்படுகிறது
கடந்த வாரம் நல்லெண்ணெய் கிலோ ரூ.260க்கு விற்ற நிலையில் தற்போது ரூ. 10 உயர்ந்து ரூ. 270க்கு விற்கப்படுகிறது. கடலை எண்ணெய் கிலோ ரூ. 180 விற்ற நிலையில் தற்போது அதே விலையில் விற்பனையாகிறது. பாமாயிலும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.130 க்கு விற்றது தற்போது ரூ140க்கு ரூ 10 விலை உயர்ந்து விற்கப்படுகிறது.
எண்ணெய்யை பொறுத்தவரை எள், கடலைபருப்பு வரத்து குறைந்து காணப்படுகிறது. வட மாநிலங்களில் மகாராஷ்டிரா, குஜராத்திலிருந்து வரத்து குறைவாலும் கர்நாடகா, ஆந்திராவிலும் வரத்து இல்லாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாமாயில் பொறுத்தவரை இறக்குமதி இல்லாத காரணமாகவும் கலால் வரி கூடுதலாக விதிப்பதாலும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது.
தாெடர்ந்து வரத்து குறைந்து வருவதால் எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.