கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு- பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோணா நோய் தொற்றின் 2வது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரதுறை மூலம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 130 கொரோனா தடுப்பூசி மையங்களில் இது வரை 1,54,074 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் சாத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கொரோனா முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு இன்றி கிடைக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.