தலைகீழாக தொங்கிய நிலையில் யோகாசனம்.
கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைகீழாக தொங்கிய நிலையில் யோகாசனம் செய்து உலக சாதனை முயற்சி
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் பாரத அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் நேரு யுவகேந்திரா சார்பில் கோவிட்-19 குறித்த பாதுகாப்பு வழிமுறைகளான முகக் கவசம் அணிதல் கை கழுவுதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில், 61 வயதான தங்கவேலு என்பவர், தலைகீழாக தொங்கிய நிலையில் சிரசாசனம், யோகாவில் சின்முத்திரை நிலை, நின்ற பாலாசனம் நிலை, தடாசனம் நிலை போன்ற பல்வேறு ஆசனங்களை செய்து உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார்.
மேலும் அமர்ந்த நிலையில் பர்வதாசனம் உள்ளிட்ட சில ஆசனங்களையும் செய்து காட்டினார்.
மேலும் விழிப்புணர்வு யோகாசனத்தில் ஈடுபட்ட தங்கவேலு கூறுகையில் கோவிட்-19 காலத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் மேலும் இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இயற்கையான பழங்கால உணவு முறைகளை உட்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த உலக சாதனை முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்தார்.