Begin typing your search above and press return to search.
தொடர் மழையால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி
தொடர் மழையால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அமைச்சர் வேலு தனது சொந்த செலவில் நிதியுதவி , அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர் மழையால் வீடுகளை இழந்த 50க்கும் மேற்பட்டோருக்கு அமைச்சர் வேலு தனது சொந்த செலவில் நிதியுதவி , அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல் மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பொதுப்பணித் துறை அமைச்சருமான எ வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடர் மழையால் வீடுகளை விழுந்த திருவண்ணாமலை நகரப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 5000 , அரிசி, வேட்டி சேலை, மளிகை பொருட்கள் , பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.