/* */

திருவண்ணாமலை: கந்துவட்டி புகார் தொடர்பாக போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கந்துவட்டி புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: கந்துவட்டி புகார் தொடர்பாக போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கந்துவட்டி தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

அப்பாவி பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைகளுக்காக பணம் கடனாகப் பெற்று கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் கந்து வட்டித் தொழிலில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துப் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காவல் நிலையத்தில் புகார் அளிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்கள் அதிலிருந்து மீண்டு நிம்மதியாக வாழ வழிவகை செய்யப்படும்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இனி எவரும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படாதவாறு அனைத்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 22 Jun 2022 3:17 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?