/* */

திருவண்ணாமலை நகராட்சி கிராம சபை கூட்டம்

Tiruvannamalai News Today -கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவதால் உள்ளாட்சி அமைப்புகளின் வெளிப்படைத்தன்மையை பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் என, திருவண்ணாமலை கலெக்டர் கூறினார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சி கிராம சபை கூட்டம்
X

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  கலெக்டர் முருகேஷ்.

Tiruvannamalai News Today -நவம்பர் ஒன்றாம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உள்ளாட்சி தினத்தை பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல் நகராட்சிகளில் உள்ள வார்டுகளிலும் கிராம சபை கூட்ட வேண்டும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதனடிப்படையில் நேற்று, திருவண்ணாமலையில் நகராட்சியின் முதல் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, நகர்மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் ,நகராட்சி ஆணையாளர் முருகேசன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் விஜயரங்கன், வார்டு கவுன்சிலர் கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது;

ஊரக உள்ளாட்சிகளை போல், நகர் உள்ளாட்சிகளில் இன்று தொடங்கி பகுதி வாரியாக வார்டு கூட்டங்கள் தவறாமல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு நடத்தப்படுவதால் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை பொது மக்களுக்கு நேரடியாக அறிந்து கொள்ள, இது ஒரு வாய்ப்பாக அமையும்.

நகர்ப்புறங்களில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் மற்றும் மேம்படுத்தவும் மக்களின் பங்களிப்பு அவசியம். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை நிலுவையின்றி செலுத்த வேண்டும். அவ்வாறு தவறாமல் வரி செலுத்துபவர்களின் பெயர் பட்டியல், வார்டு சபா கூட்டங்களில் பெயர் விலாசங்களோடு வாசிக்க வேண்டும் என்று அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற வேண்டும்.

திருவண்ணாமலை நகராட்சி வார்டுகளில், நகராட்சி சார்பில் வசூலிக்கப்படும் வரி விகிதம் மிகவும் குறைந்த அளவாக உள்ளது. 1-வது வார்டில் மட்டும் ரூ.39 லட்சம் வரிபாக்கி இருப்பதாக நகராட்சி அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அரசால் ஒதுக்கப்படும் நிதியை வைத்து மட்டுமே, நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்ய முடியாது. பொதுமக்கள் வரியை செலுத்தினால் தான் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அனைத்து பணிகளையும் செய்ய முடியும். பொதுமக்களிடம் வரி கட்டணங்களை முறையாக வசூல் செய்யவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த 3 மாதத்திற்குள் அனைத்து வார்டுகளிலும் 90 சதவீதத்திற்கு மேல் வரிவசூலை வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் செய்ய வேண்டும். வரிவசூல் முழுமையாக நடக்க, வரிகளை செலுத்தி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, கால்வாய் தூர்வார வேண்டும், பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் பிரதாப் சிங் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Nov 2022 6:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?