ஆசிரியர்கள் சமுதாயப் பணியும் ஆற்ற வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்
ஆசிரியர்கள் சமுதாயப் பணியும், மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தையும் கொண்டு வர வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் கூறினார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் முத்து தலைமை வகித்தார். பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆனந்தராஜ் வரவேற்றார்.
முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆசிரிய ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி பேசுகையில், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் சமுதாயப் பணியும் ஆற்ற வேண்டும். மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகளை கொடுத்து ஒழுக்கம் நிறைந்தவர்களாக மாற்ற பாடுபடவேண்டும் என்றார்.
மேலும் இன்றைய சூழலில் இணையவழி கற்றல் சவால்களும் தீர்வுகளும் மற்றும் குறுந்தொழில் கல்வி முறையில் ஏற்பட்ட சவால்களும் எதிர்வினையும் என்ற தலைப்புகளில் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் திருவண்ணாமலை வேலூர் ,விழுப்புரம், கடலூர் ,கள்ளக்குறிச்சி, மாவட்டங்களை சேர்ந்த 273 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.