நெல் பயிரை காப்பீடு செய்ய நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள்
நெல் பயிரை காப்பீடு செய்ய நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள். உடனே பதிவு செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
HIGHLIGHTS
இது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், நிகழாண்டு முதல், சில மாற்றங்களை செய்து புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி நடப்பு ஆண்டுக்கான நெல், 2 சிறப்புப் பட்டம் அறிவிக்கை செய்யப்பட்டு காப்பீட்டு கட்டணம் செலுத்தும் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், தங்களது பயிர்களுக்கு கடன் பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமோ அல்லது அரசுடைமை வங்கிகள் மூலமும், விருப்பத்தின் பேரில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்துகொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான அடங்கலை, அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது அரசுடைமை வங்கிகளில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பொது சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லது வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். நெல் இரண்டு சிறப்பு பட்டம் காப்பீட்டுத்தொகை ஏக்கருக்கு ரூபாய் 458, நெல் பயிருக்கான பதிவு செய்ய கடைசி நாள் நவம்பர் 15ஆம் தேதி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.