Begin typing your search above and press return to search.
தேசிய கொடியேற்றி வந்தே மாதரம் பாடலை பாடிய இசைஞானி இளையராஜா
திருவண்ணாமலையில் இன்று தேசிய கொடியேற்றி இசைஞானி இளையராஜா வந்தே மாதரம் பாடலை பாடினார்.
HIGHLIGHTS
கடந்த 1947ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பாரம்பரியத்தை தொடர்ந்து, காலை 7 மணிக்கு மேஸ்ட்ரோ இளையராஜா (பாராளுமன்ற உறுப்பினர்) கொடியேற்றி வைத்தார்.
பின்னர் வந்தே மாதரம் பாடலை பாடி அங்கிருந்த பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆசிரமத் தலைவர் ஆனந்த் வெங்கட்ராமன், ஆசிரம மேலாளர் கிருஷ்ணன், ஆகாஷ் முத்துகிருஷ்ணன், டிவிஎஸ் ராஜாராம், நாராயணமூர்த்தி, கமலாட்சி பார்மசி காலேஜ் இயக்குனர் செந்தில் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.