/* */

திருவண்ணாமலையில்கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி

திருவண்ணாமலையில் கலைஞர் நினைவு நாளை ஒட்டி அண்ணா சிலையிலிருந்து அமைதி பேரணி புறப்பட்டு கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில்கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி
X

திருவண்ணாமலையில் கருணாநிதி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக  நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கருணாநிதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி , ஒன்றியம் ,பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

திருவண்ணாமலை நகர திமுக சார்பில் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அண்ணா சிலையிலிருந்து அமைதி பேரணி புறப்பட்டு வேலூர் சாலையில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, வடக்கு மாவட்ட அமைப்பாளர் தரணி வேந்தன், திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் , முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், மாவட்டத் துணைச் செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர மன்றத் துணைத் தலைவர் ராஜாங்கம், நகர மன்ற உறுப்பினர்கள், நகர அமைப்பாளர்கள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ,மாவட்ட கழக செயலாளர் தரணி வேந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உடன் நகர கழக செயலாளர், நகர மன்ற தலைவர் ஜலால், கழக நிர்வாகிகள் ,பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

கீழ்பெண்ணாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம் ,ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாள,ர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நகர திமுக சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

செங்கம் நகர திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று வேலூர் சாலை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதிதிரு உருவப்படத்திற்கு மாவட்ட கழக துணை செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான கிரி, அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் நகர செயலாளர் அன்பழகன் ஒன்றிய கழக செயலாளர், மாவட்ட கவுன்சிலர்கள் பேரூராட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Aug 2023 1:38 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...