/* */

வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கான விருப்ப படிவம் வழங்கும் பணி துவக்கம்

திருவண்ணாமலையில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கான விருப்ப படிவம் வழங்கும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கான விருப்ப படிவம் வழங்கும் பணி துவக்கம்
X

வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கான விருப்ப படிவம் வழங்கும் பணி தொடங்கி வைத்த கலெக்டர் 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின் படி 2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதி திருவண்ணாமலை, ஆரணி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளது.

மேற்காணும் தேர்தல் பணிக்கென இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் அனைவரும் அவர்களது வீட்டில் இருந்தே வாக்களித்து பயன் பெற ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக 12-D படிவம் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி

திருவண்ணாமலையில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கான விருப்ப படிவம் வழங்கும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை வேங்கிகால், பேருந்து நிலையம் அருகே அன்னை அஞ்சுகம் நகரில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தே வாக்களிப்பதற்கான விருப்ப படிவம் 12 D , திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கி தொடங்கி வைத்தார்.

தேர்தல் பணிக்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் 2024 இல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 40 சதவீதத்துக்கு மேற்பட்ட மாற்று திறன் தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் எந்த தொகுதி வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் அனைவரும் அவர்கள் வீட்டிலிருந்து வாக்களித்து பயன்கிற ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக 12 D படிவம் அவர்கள் வது வீட்டிற்கு நேரில் சென்று வழங்கப்படும்.

இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு வாக்காளர்கள் அஞ்சல் மூலமாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருவண்ணாமலை அஞ்சுகம் நகரில் கண்ணம்மாள் வயது 90 மற்றும் முருகர் கோவில் தெரு கருணாகரன் வயது 88 ஆகியோருக்கும் ஓம் சக்தி நகர் பிரதான சாலையில் மாற்றுத்திறனாளி பிரபு வயது 37 என்பவரது வீட்டில் நேரில் சென்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் 12 D படிவத்தினை வாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாதினி வட்டாட்சியர் தியாகராஜன் தேர்தல் பிரிவு அலுவலர்கள் தாசில்தார்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 March 2024 2:52 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  2. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  3. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  4. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  5. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  6. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  7. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  8. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  10. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...