தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் மாநில மாநாடு தொடக்கம்
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் மாநில மாநாடு தொடங்கியது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் மாநில மாநாடு தொடங்கியது. தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். வரலாற்றுத்துறை தலைவர் தனிஸ்லாஸ் வரவேற்றார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநில மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் தலைவர் கீதா கண்ணம்மாள், பொதுச் செயலாளர் சுந்தரம், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேந்திரன், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் வெங்கட்ராமன் ஆகியோர் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினர்.
இன்று இந்த மாநாட்டில் சமூகம், பொருளாதாரம், வரலாற்று அரசியல், கலை மற்றும் கட்டிடக்கலை வரலாறு போன்ற அமர்வுகளில் கருத்தரங்குகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளன.