/* */

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

தை கிருத்திகையான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
X

தை கிருத்திகையை முன்னிட்டு காவடி எடுத்த பக்தர்கள் 

தை கிருத்திகையொட்டி முருகர் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். இதையொட்டி அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டதும் கம்பத்துஇளையனார் சன்னதி மற்றும் கோபுரத்து இளையனார் சன்னதியில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கவாடி எடுத்து மாடவீதியில் வலம் வந்து முருகபெருமானை வணங்கினர். இதேபோல் திருவண்ணாமலை அடுத்த மங்கலம், எறும்பூண்டி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள முருகர் கோயில்களில் தேர்த்திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் முதுகில் அலகு குத்தி பறக்கும் காவடி எடுத்தும், நேர்த்தி கடன் செலுத்தினர்.

Updated On: 9 Feb 2022 2:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?