/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Vaccination Camp - திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான சிறப்பு முகாம்.

Vaccination Camp -கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடைபெற்றது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. அருணாசலேஸ்வரர் கோவில், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முகாம்களில் மாலை 6 மணி நிலவரப்படி 75 ஆயிரத்து 801 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர்.

இதில் சுமார் 65 ஆயிரம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 July 2022 8:42 AM GMT

Related News