செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்
மனைவியை வேலைக்கு சேர்த்ததால் துணிக்கடையில் புகுந்து வியாபாரி மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
செய்யாறில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் துணிக்கடையில் புகுந்து வியாபாரியை தாக்கி ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செய்யாறு டவுன் லோகநாதன் தெருவை சேர்ந்தவர் பாசில், இவர் அதே தெருவில் ஆண்களுக்கான துணிக்கடை வியாபாரம் செய்து வருகிறார். இந்தக் கடையில் பெரிய செங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராகுல் என்பவரது மனைவி ஆஷா என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி இரவு 9 மணி அளவில் ஆஷாவின் கணவர் ராகுல் திடீரென கடைக்குள் அத்துமீறி நுழைந்து எனது மனைவி ஆஷாவை ஏன் வேலையில் சேர்த்து உள்ளீர்கள் நீங்கள் வேலையில் வைத்திருப்பதால் தான் அவள் என்னை மதிப்பதில்லை. எப்போது பார்த்தாலும் யாருடனும் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்.
வேலையில் வைத்துக் கொண்டிருந்தால் உங்களை ஒழித்துக் கட்டி விடுவேன் என பாசிலை பார்த்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து தாக்கி உள்ளார். கடையில் ஏற்பட்ட கூச்சலை பார்த்து பக்கத்து கடையிலிருந்து வந்த வியாபாரி முகமது இம்ரானையும் ஆபாசமாக பேசி கத்தி காட்டி மிரட்டி உள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதை பார்த்ததும் அங்கிருந்து ராகுல் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து பாசில் செய்யாறு போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து ராகுலை இன்று கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளைச்சிறையில் அடைத்தனர்.
மது போதையில் தகராறு
ஆரணி அருகே மது போதையில் தகராறு செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
காஞ்சிபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் , அரி (எ) ஹரிஷ் ஆகியோா் ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலத்துக்கு வந்தனா்.
அப்போது, அவா்கள் இருவரும் மது வாங்கி குடித்தனராம். பின்னா், மது போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனராம்.
அந்தப் பகுதி மக்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனா். இதில் ஹரி தப்பி ஓடிவிட்டாராம். காா்த்திக்கைப் பிடித்து ஆரணி கிராமிய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.