/* */

குறைதீர் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்களை அளித்த பொதுமக்கள்

குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டியில் மனுக்களை அளித்து சென்ற பொதுமக்கள்

HIGHLIGHTS

குறைதீர் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்களை அளித்த பொதுமக்கள்
X

குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் புகார் பெட்டியில் மனுக்களை அளித்த பொதுமக்கள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்த பொதுமக்கள், கோரிக்கை மனுக்களை பெட்டியில் செலுத்திவிட்டு சென்றனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், திங்கள் கிழமைதோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம், கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் விதமாக குறைதீர்க்கும் நாள் கூட்டம் மறு அறிவிப்பு வரும்வரை நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலக தரைதளத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர்வு மனுக்களை செலுத்துவதற்கான பெட்டியில் மனுக்களை செலுத்திவிட்டு சென்றனர்.

இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும், கலெக்டரிடம் நேரில் மனு அளிக்க முடியாதது ஏமாற்றம் அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Updated On: 11 Jan 2022 8:31 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...