/* */

திருவண்ணாமலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்காக அனுமதி

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்காக அனுமதி
X

திருவண்ணாமலை அரசு மருத்துவமனை , கோப்பு படம் 

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழை காரணத்தினால் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.

சமீபத்தில் சென்னையில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் தமிழக அரசு முடுக்கிவிட்டு உள்ளது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது. இதனால் சிலருக்கு காய்ச்சல், சளி போன்ற வியாதிகள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அரவிந்த் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.

தற்போது ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் என 4 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு தனி வார்டு உள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என தனித் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு 32 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.

இதை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் சுகாதார துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். டெங்கு தடுப்பு பணியாளர்கள் கிராமங்கள் தோறும் சென்று பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Updated On: 15 Sep 2023 1:46 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது