Begin typing your search above and press return to search.
நெல்லையப்பர் கோவில் யானைக்கு நீச்சல் குளம்: பூமி பூஜையுடன் பணி தொடக்கம்
நெல்லையப்பர் கோவிலில் உள்ள காந்திமதி யானை குளிப்பதற்கு, ரூ. 10 லட்சம் மதிப்பில் நீச்சல் குளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
HIGHLIGHTS
தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில், அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஒன்று. இந்த கோவிலில் காந்திமதி என்ற பெண் யானை உள்ளது. காந்திமதி யானைக்கு ரூபாய் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், வசந்த மண்டபம் அருகே நீச்சல் குளம் அமைக்கும் பணி இன்று துவங்கியது.
இதற்காக யானைக்கு இன்று காலை பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, அதன் பிறகு பூமி பூஜை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுவரை, காந்திமதி யானை தாமிரபரணி ஆற்றுக்கு அழைத்து செல்லப்பட்டு குளிந்து வந்தது. தற்போது, இங்கேயே நீச்சல்குளம் அமைத்தால் யானையை குளிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று பக்தர்கள் கூறினர்.