சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி நகர கூட்டம்: பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நகர கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
HIGHLIGHTS
சுத்தமல்லி விரிவாக்க பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும். எஸ்டிபிஐ கட்சி நகர கூட்டத்தில் தீர்மானம்.
நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சியின் பகுதி கூட்டம் பகுதி செயலாளர் ஜாஹிர் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது. செய்யது அலி வரவேற்புரை ஆற்றினார். ஏழாவது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் களப்பணிகள் மீளாய்வு செய்யபட்டது. பின்னர் கூட்டத்தில் சுத்தமல்லி விரிவாக்க பகுதிகளான பர்வீன் நகர், கே.எம்.ஏ. நகர், வ.உ.சி நகர் ஆகிய பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும், குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், சாலைகள் அமைக்கவும், விரிவாக்கம் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிர்வாகம் சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
இக்கூட்டத்தில் சுத்தமல்லி பகுதி, ஆறாவது மற்றும் ஏழாவது வட்ட நிர்வாகிகள் முபாரக் அலி, பயாஸ், அப்துல் ரசாக், பாதுஷா, சுத்தமல்லி பீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக 6வது வார்டு கிளை பொருளாளர் ரசாக் நன்றியுரை ஆற்றினார்.