/* */

நெல்லை சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளியில் சமய நல்லிணக்க தீபஒளி திருவிழா

நெல்லை சங்கர்நகர் பள்ளியில் சமய நல்லிணக்க விழாவில் பள்ளி மாணவிகளின் சர்வ சமயப் பாடல் எழுதப்பட்டு மாணவ, மாணவிகள் பாடினார்கள்.

HIGHLIGHTS

நெல்லை சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளியில் சமய நல்லிணக்க தீபஒளி திருவிழா
X

சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளியில் சமய நல்லிணக்க தீபஒளி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை தாழையூத்து, சங்கர்நகர், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பன்னாட்டு மதச் சுதந்திர கூட்டமைப்பு (ஐ.ஏ.ஆர்.எஃ), சர்வ சமய கூட்டமைப்பு இணைந்து சமய நல்லிணக்க விழா, தீபஒளி திருவிழா பள்ளியின் கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் உஷாராமன் தலைமை தாங்கினார். சர்வசமயத்தினர் திருவிளக்கு ஏற்றினர். சர்வசமய கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கவிஞர்.கோ. கணபதி சுப்பிரமணியன், இசையாசிரியர் ஜேசுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா கலந்து கொண்டு தீபாவளி இனிப்புகள் மற்றும் புத்தகங்களை வழங்கி தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். சர்வசமய கூட்டமைப்புத் தலைவர் வழக்கறிஞர் பிடி. சிதம்பரம் தொடக்க உரை ஆற்றினர். பரசமய கோளரி நாத ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மாநந்தா சரஸ்வதி சுவாமிகள், திருஇருதய சபை அருட்சகோதரர் எம்டி. ஜெபஸ்தியான், கம்பன் இலக்கிய சங்கப் பொருளாளர் எம்.ஏ. நசீர், சர்வ சமய கூட்டமைப்பு துணைத்தலைவர் மரியசூசை சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவில் பள்ளி துணை முதல்வர் கங்காமணி நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவிகளின் சர்வ சமயப் பாடல் எழுதப்பட்டு, இசையமைத்து, இசையாசிரியா ஜேசுராஜன் தலைமையில் ஆசிரியப் பிரதீபா மற்றும் மாணவிகள் பாடல் நடைபெற்றது. மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியப் பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 29 Oct 2021 2:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...