நெல்லையில் கனமழை - இடி தாக்கி 2 பெண்கள் பலி; மூதாட்டி படுகாயம்
நெல்லை, மேல கருங்குளத்தில் வயலில் வேலை செய்து வந்த இரண்டு பெண்கள், இடி தாக்கியதில் உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நெல்லை மாநகர பகுதிகளில் ரோடுகளில், வெள்ளம் போல் மழைநீர் தேங்கி பெரும் அவதி உண்டானது.
இந்நிலையில், மேலப்பாளையம் அருகே உள்ள மேல கருங்குளம் வாய்க்கால் பாலம் அடுத்துள்ள பகுதியில், சொந்த வயல்வெளியில் வேலை செய்த மூன்று பெண்கள், மழையின்போது இடிதாக்கி பலத்த காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பாலேஸ்வரி வயது 22 முத்துமாரி வயது 36 ஆகியோர், சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மூதாட்டி வள்ளியம்மாள் வயது 60 என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.