அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் போராட்டம்
அமைச்சர் ராஜ கண்ணப்பனை பதவியை விட்டு அகற்றக்கோரி மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவேந்திர குல வேளாளர் வகுப்பைச் சார்ந்த முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை ஜாதி பெயரைச் சொல்லி இழிவாக ஒருமையில் பேசியுள்ள தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் மீது உடனடியாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தின் தலைவர் மாரியப்பப் பாண்டியன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக முதலமைச்சரை கண்டித்தும், அமைச்சர் ராஜகண்ணப்பன் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.