/* */

குலசை முத்தாரம்மன் கோவில் கொடியேற்றம்: விரதமிருந்து மாலையணிந்த பெண்கள்

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் கொடியேற்றத்தை தொடர்ந்து, நெல்லையில் பெண்கள் விரதமிருந்து மாலை அணிவித்து கொண்டனர்.

HIGHLIGHTS

குலசை முத்தாரம்மன் கோவில் கொடியேற்றம்: விரதமிருந்து மாலையணிந்த பெண்கள்
X

குலசை முத்தாரம்மன் கொடியேற்றத்தை தொடர்ந்து,  நெல்லையில் பக்தர்கள் வீடுகளில் மாலை அணிந்தனர்.

திருச்செந்தூர் அடுத்துள்ள, உலக புகழ் பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல், இவ்விழா நடைபெற்றது. காலை ஹோமம், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்களுடன் துவங்கிய கொடியேற்றம் நிகழ்ச்சி, பகல் 11.30 மணியளவில் நிறைவு பெற்றது.

ஆண்டு முழுவதும் தசரா கொடியேற்றத்தின்போது, முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள், தங்கள் குடும்பத்தினருடன் சென்று மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, முத்தாரம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதியில்லாததால், தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்கள், பக்தர்கள் விரதமிருக்கும் காளிபிறை ஆகிய இடங்களுக்கு சென்று முத்தாரம்மனை வணங்கி மாலை அணிந்து வருகின்றனர்.

நெல்லை டவுன், பாறையடி பகுதியில் உள்ள காளி சாமி என்ற கண்ணன், 25 ஆண்டுகளாக முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிவித்து சுவாமியை வழிபாடு செய்து வருகிறார். இவரது வீட்டில் பத்திரகாளி சிலை வைத்து பூஜை செய்து வருகிறார். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு விரதமிருந்து செல்லும் பக்தர்கள், பெண்கள் அனைவரும், இன்று காளி சாமியிடம் மாலை அணிந்து கொண்டனர்.

Updated On: 6 Oct 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?