வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து பயிற்சி
திருநெல்வேலியில் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தினமும் அரசு அதிகாரிகள் பறக்கும் படையினர் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தாங்கினார். தொடர்ந்து 1924 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வேட்பாளர்கள் பெயர்களை பொருத்த வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வது தொடர்பாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு எந்தப் பகுதியில் சீல் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை எடுத்துக் கூறப்பட்டது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.