Begin typing your search above and press return to search.
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
ஜனவரி மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை வழங்க வேண்டும், ஆட்குறைப்பு செய்யக்கூடாது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆண்ட பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சூசை மரிய அந்தோணி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.