ராதாபுரம் தொகுதி உவரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
ராதாபுரம் தொகுதி உவரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் பணி நியமன ஆணைகளை சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை வழங்கினார்
HIGHLIGHTS
ராதாபுரம் தொகுதி உவரியில் ஊருணி அமைப்பு மற்றும் தாமரை சமூக அமைப்பு சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை சால்காம்ப் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் சசிகுமார் கெந்தம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் நெல்லை,தூத்துக்குடி,குமரி, தென்காசி,கோவை,சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நேர்முகத் தேர்வை ரிலையன்ஸ்,பேனாசோனிக், ஜியோ,ராயல் என்ஃபீல்ட், டிவிஎஸ் உள்ளிட்ட ஏராளமான பன்னாட்டு கம்பெனிகள் நடத்தியது. 8, 600 காலி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை கலந்துகொண்டார்.
நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தாமரை சமூக அமைப்பு தலைவர் தாமரை செந்தூர் பாண்டியன், வள்ளியூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் அருண்குமார், நிர்வாகிகள் உவரி ரமேஷ், ராஜன் கிருபாநிதி, செல்வகுமார், சந்திரமோகன், கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.