/* */

ஆக்ஸிஜன் உற்பத்தி கால அளவு தாண்டி ஸ்டெர்லைட் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது : ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பேட்டி

ஆக்ஸிஜன் உற்பத்தி கால அளவை தாண்டியும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

ஆக்ஸிஜன் உற்பத்தி கால அளவு தாண்டி ஸ்டெர்லைட் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது : ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பேட்டி
X

ஆக்ஸிஜன் உற்பத்திக்கு கொடுக்கப்பட்ட கால அளவை தாண்டியும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஜூலை 30ம் தேதி வரை உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து கடந்த சில மாதத்திற்கு முன்பு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி அலகில் இருந்து திரவ ஆக்சிஜன் தயார் செய்யப்பட்டு கொரோனா நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெறும் ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் மற்றும் அதன் பணி நிலவரம் குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஆக்சிஜன் உற்பத்தி கண்காணிப்புக் குழு தலைவரும், மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தரப்பிலிருந்து பேராசிரியை பாத்திமா பாபு, வணிகர் சங்கம் சார்பில் நிர்வாகி ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட திரவ ஆக்சிஜன் அளவு மற்றும் ஆக்சிஜன் வாயு உருளைகள் அனுப்பப்பட்ட விவரம் உள்ளிட்ட தகவல்கள் பரிமாறப்பட்டன. மேலும் ஆலை சார்ந்து எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு விளக்கம் தரப்பட்டது.

கூட்டத்தின் நிறைவில் பேராசிரியை பாத்திமா பாபு மற்றும் வணிகர் சங்க நிர்வாகி ராஜா ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் :- கொரோனா அச்சுறுத்தலை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் அனுமதி பெற்றது. ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி அலகில் மருத்துவ பயன்பாட்டுக்காக ஜூலை 30-ஆம் தேதி வரை அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தற்போது அங்கு ஆக்சிஜனை உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் இரண்டு உற்பத்தி அலகுகள் இருக்கும் நிலையில் ஒரு அலகில் மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது உற்பத்தி அலகில் இதுவரை ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க முடியவில்லை. நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பு சொன்னதுபோல் முழு இலக்கான 1050 மெட்ரிக் டன் அளவு ஆக்ஸிஜனை ஆலையால் எட்ட முடியவில்லை. இரண்டாவது அலகில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக இனி அதில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியாது என்ற அறிக்கையும் வேதாந்தா நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வருவது அனைவரும் அறிந்ததே. எனவே ஸ்டெர்லைட் வேதாந்தா தரப்புக்கு ஆக்சிஜன் உற்பத்திக்காக ஜூலை 30ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த அனுமதியை பயன்படுத்தி ஜூலை மாதத்திற்கு பின்னரும் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் தனது பணிகளை தொடருமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அதை விளக்கும் விதமாக இன்று கூட்டத்தில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு பேசப்பட்டன.

வேதாந்தா நிறுவனம் முற்றிலுமாக தூத்துக்குடி மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பம். எனவே நீதிமன்றம் அனுமதித்துள்ள கால அளவை தாண்டியும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை ஒருபோதும் தூத்துக்குடி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மீறினால் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் தூத்துக்குடியில் நிச்சயம் எழும் என்றனர்.

Updated On: 30 Jun 2021 5:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!