Begin typing your search above and press return to search.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்பணிகள் : மாநகராட்சி ஆணையரிடம் ஏஐசிசிஐ கோரிக்கை!!
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய சில வளர்ச்சிப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையரிடம் ஏஐசிசிஐ நிரிவாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சியின் 20வது புதிய ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள சாருஸ்ரீயை தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் (ஏஐசிசிஐ) தலைவர் ஜோ பிரகாஷ், துணைத் தலைவர் தமிழரசு ஆகியோர் நேரில் சந்தித்து மலர் கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர், குறிப்பாக மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய சில வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆணையரிடம் அவர்கள் மனு அளித்தனர்.