/* */

மாணவர்களே சுதந்திரத்தை பேணிக்காக்கும் நாளைய தலைவர்கள்.. அமைச்சர் கீதாஜீவன் பேச்சு...

சுதந்திரத்தை பேணிக்காக்கும் நாளைய தலைவர்கள் மாணவர்கள்தான் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

மாணவர்களே சுதந்திரத்தை பேணிக்காக்கும் நாளைய தலைவர்கள்.. அமைச்சர் கீதாஜீவன் பேச்சு...
X

தூத்துக்குடியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த கண்காட்சியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் சென்னையில் உள்ள மத்திய மக்கள் தொடர்பகம் ஆகியவை சார்பில், தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:

தமிழகத்திலேயே அதிக அளவு சுதந்திர போராட்ட வீரர்கள் நிறைந்த மாவட்டங்கள் புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்தான். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராக தனது சொத்துக்களை இழந்து கப்பல் இயக்கியவர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 408 சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்து உள்ளனர். அவர்களில் நிறைய பேரின் புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் இங்கே இடம்பெற்றிருக்கின்றது. தூத்துக்குடி புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அறியப்படாத தியாகிகள் என்ற புத்தகத்தினை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

போட்டி நிறைந்த உலகத்தில் மாணவ, மாணவிகள் அதிகமாக கற்று அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாடப் புத்தகங்களை மட்டுமல்லாமல் நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். மாணவப் பருவத்தில் நன்றாக படித்தால் நீங்கள் போட்டித் தேர்வுகளுக்கு தனியாக படிக்க வேண்டியது இல்லை.

சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றினை நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரிவித்து அவர்களும் அறிந்து கொள்ள செய்ய வேண்டும். பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் நாளைய தலைவர்கள் மாணவர்கள்தான். நீங்கள் நன்றாக கற்று அறிவாற்றல் மிக்க சமுதாயமாக மாற வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2023 7:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!