Begin typing your search above and press return to search.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க கோரி மனு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க அனுமதி வழங்குமாறு வேதாந்தா குழுமம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து அதை இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும். ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ள சூழலில் இலவசமாக ஆக்சிஜன் தர ஸ்டெர்லைட் ஆலை அனுமதி கோரியுள்ளது.