Begin typing your search above and press return to search.
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று: 2 பேர் உயரிழப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்று மாவட்டம் முழுவதும் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 ஆயிரத்து 859 ஆக உள்ளது. இன்று 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 55 ஆயிரத்து 280 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 2 பேர் உயரிழந்துள்ளனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 403 ஆக உள்ளது.