முக கவசம் அணியாத 742 பேர் மீது நடவடிக்கை: ரூ.1,48,400 அபராதம்
தூத்துக்குடி: நேற்று ஒரே நாளில் முககவசம் அணியாத 742 பேருக்கு ரூ.1,48,400 அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 8 பேருக்கு ரூ. 4000/- அபராதமும் விதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ. 200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ. 500 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்கிழமையான நேற்று ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 219 பேர் மீதும், ஊரக உட்கோட்டத்தில் 74 பேர், திருச்செந்தூர் 53 பேர், ஸ்ரீவைகுண்டம் 47 பேர், மணியாச்சி 97 பேர், கோவில்பட்டி 128 பேர், விளாத்திகுளம் 101 பேர், சாத்தான்குளத்தில் 23 பேர் என மொத்தம் 742 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1,48,400 பணம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 6 பேர், கோவில்பட்டி 1, சாத்தான்குளம் 1 என 8 பேர் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 4,000 பணம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.