/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 52 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டதில் சட்டவிரோதமாக செயலில் ஈடுபட்டவர்கள்52 பேர் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 52 பேர் கைது
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின்பேரில் அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார்ரோந்துப் பணி மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், கஞ்சா விற்பனை, புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 6 வழக்கும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 8 வழக்கும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 5 வழக்களும், மணியாச்சி உட்கோட்டத்தில் 3 வழக்கும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 10 வழக்கும், விளாத்திக்குளம் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் ஆக மொத்தம் 50 வழக்குகள் பதிவு செய்து 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரும், மதுபாட்டில்கள் விற்பனை செய்த 26 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 21 பேரும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சா, 634 புகையிலைப் பாக்கெட்டுகள், 225 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Dec 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!