காவலர் குடும்பத்திற்கு 10 லட்சம் காப்பீடு தொகை வழங்கல்
தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட முதல்நிலை காவலர் குடும்பத்திற்கு விபத்து காப்பீட்டு தொகை 30 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றிய புங்கலிங்கம் என்பவர் கடந்த 10.06.2020 அன்று கொலை செய்யப்பட்டார். இவர் தனியார் வங்கி கணக்கின் மூலம் சம்பளம் பெற்று வந்தார். இந்த வங்கி கணக்கின் மூலம் சம்பளம் பெற்று வந்த அவருக்கு, அந்த வங்கி சார்பாக விபத்து காப்பீடு செய்திருந்தது. அந்த விபத்து காப்பீட்டுத் தொகை ரூ.30 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் இன்று (10 ம் தேதி) மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் புங்கலிங்கத்தின் மனைவி காசியம்மாளிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆக்ஸிஸ் வங்கி கோயம்புத்தூர் வங்கி தலைவர் சக்திவேல், திருநெல்வேலி வங்கி தலைவர் ஷஜி ஜான், கோயம்புத்தூர் சம்பளபிரிவு தலைவர் கலைவாணி, தூத்துக்குடி வங்கியின் கிளை தலைவர் கார்த்திகேயன், தூத்துக்குடி விக்டோரியா ரோடு வங்கி கிளை தலைவர் உதயா சங்கர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.