/* */

எஸ்பி., அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

எஸ்பி., அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்
X

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீசாருக்கும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப்பணியாளர்களில் அலுவலக கண்காணிப்பாளர் மாரியம்மாள் தலைமையில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் என 22 பெண் அமைச்சுப்பணியாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆகியவற்றிலிருந்து இன்ஸ்பெக்டர் தேவி, ஜெரால்டின் வினு ஆகியோர் தலைமையில் 15 பெண் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

மகளிர்தினத்தை முன்னிட்டு மாவட்ட எஸ்பி.,அலுவலகத்தில் மேற்படி மகளிர் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் போலீசார் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் முன்னிலையில் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர்.தொடர்ந்து எஸ்.பி., ஜெயக்குமார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்களும் அனைத்து வகையான செல்வங்களுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு வாழவும், சிறப்பாக பணியாற்றவும் வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 8 March 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்