Begin typing your search above and press return to search.
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜுக்கு சிறந்த எம்.பி.க்கான விருது
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜுக்கு சிறந்த எம்.பி.க்கான விருது அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் ஏழை ,எளிய மக்களுக்கு உதவும் அமைப்பு நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் செயல்படும் சிறந்த மனிதர்களை தேர்வு செய்து இந்த அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.
அதன்படி திருவாரூரில், இந்த ஆண்டிற்கான சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது நாகை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜுகு வழங்கப்பட்டது. மிகவும் எளிமையாகவும், ஏழை மக்களுக்கு, விவசாயிகளுக்கு உதவிகள் பல செய்து வருவதால் இந்த விருது வழங்கப்பட்டதாக அப்துல் கலாம் அறக்கட்டளை அமைப்பினர் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சியினர், தன்னார்வ தொண்டு அமைப்பினர், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.